உலக தாய் மொழித்தினம் இன்றாகும்




உலக தாய் மொழித்தினம் இன்றாகும்.
நடைமுறைக் கல்வி, வழிக்காட்டல் மற்றும் கல்வியின் பிரதிபலன் என்பதே இந்த வருடத்திற்கான தொனிப்பொருளாக காணப்படுகின்றது.
அனைத்து மொழிகளினதும் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு என்பதை நோக்காக கொண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் 2007 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய இன்றை நாள் உலக தாய்மொழித் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் வங்காள மொழியை அரச மொழியா பிரகடனப்படுத்த கோரி 1952 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து தாய்மொழித் தினம் கொண்டாடப்படுகின்றது.
உலகில் தற்போது 7000 இற்கும் அதிகமான மொழிகள் பயன்படுத்தப்படுவதாகவும் அவற்றில் 50 வீதமான மொழிகள் அழிந்து செல்லும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலத்தின் மாற்றத்திற்கு அமைய தாய்மொழி மாற்றம் அடைய வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜே.பீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
உலக தாய் மொழித்தினம்