முந்தல், ரயில் விபத்தில் மூவர் காயம்



முந்தல், கரிகட்டை ரயில் கடவையில் கொள்கலன் வாகனமொன்று ரயிலுடன் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (20) காலை 8.10 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்கலன் வாகன மற்றும் ரயில் சாரதிகளும், பாதசாரி ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இயந்திரங்களை ஏற்றிச்சென்ற கொள்கலன் வாகனம் கொழும்பிலிருந்து பயணித்த ரயிலுடன் மோதியுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.