FCID நீக்கப்பட மாட்டாது- அரசு



எந்தக் காரணம் கொண்டும், எவ்வளவுதான் எதிர்ப்புக்கள் வந்தாலும் நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவை நீக்குவதில்லையென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த ஓரிரு நாட்களுக்குள் நடைபெற்ற அரசாங்கத்தின் முக்கிய உயர் மட்டக் கலந்துரையாடலில் வைத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பிரிவை நீக்கினால், தற்பொழுது முன்னெடுத்து வரும் சகல விசாரணைகளையும் இடைநிறுத்த வேண்டிவரும் என்பதனால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
யோசித்த ராஜபக்ஷவை கைது செய்தது முதல், இந்தப் பிரிவை நீக்க வேண்டுமென்ற கருத்து எதிர்க் கட்சிக்குள்ளும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் பலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.