காத்தான்குடி-ஆரயம்பதி பிரதேசத்தில் மரமால் ஒன்றில் தீ பிடித்து பாரிய சேதங்களுக்கு உள்ளான நிலையில் பொலிசாரின் உதவியுடனும் மாநகரசபையின் தீயனைப்பு ஊழியர்களின் உதவியுடனும் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இச்சம்பவம் மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் இத்தீவிபத்து இடம்பெற்றமைக்கான காரணங்கள் எதுவென சரியாக குறிப்பிட முடியாது எனவும் இம்மரமால் நிலையத்திற்கு பொறுப்பான கே.நேசராசா என்பவர் குறிப்பிட்டார்.

