வசீம் தாஜூதீன் கொலை: பேராசிரியர் ஆனந்த சமரசேகர பிணையில்





இன்று நீதிமன்றில் சரணடைந்த முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தேடுதல் ஆணைக்கு அமைவாக, பெற்றுக் கொள்ளப்பட்ட உயிரிழந்த வசீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆனந்த சமரசேகர கைது செய்ய முடியும் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் ஆனந்த சமரசேகர கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் இன்று சரணடைந்ததையடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.