’அரசாங்கத்தைப் பலப்படுத்த எம்மோடு இணையுங்கள்’



நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் எவரும், அரசாங்கத்தைப் பலப்படுத்துவதற்காக, தம்மோடு கைகோர்க்கலாமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
எதிர்வரும் நாட்களில், முழுமையான அமைச்சரவை மாற்றமொன்று மேற்கொள்ளப்படுமென்று, ஊடகப் பிரதானிகளுடனான இன்றைய (06) சந்திப்பின் போது, ஜனாதிபதி கூறினார்.
அத்துடன், உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முறைமையை, உடனேயே திருத்தத்துக்கு உள்ளாக்க வேண்டுமென்றும், ஜனாதிபதி கூறினார்.