எம்.பிக்களுக்கு சம்­பள அதி­க­ரிப்­புக்கு ஒரு­போ­தும் இல்லை



அமைச்­சர்­கள், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் சம்­பள அதி­க­ரிப்­புக்கு ஒரு­போ­தும் இட­ம­ளிக்­கப்­பட மாட்­டாது என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்­ளார்.
அமைச்­சர்­கள், இரா­ஜாங்க அமைச்­சர்­கள், பிரதி அமைச்­சர்­கள் மற்­றும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் அடிப்­ப­டைச் சம்­ப­ளம் 215 சத­வீ­த­தத்­தால் அதி­க­ரிக்க கட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தில் இணக்­கம் காணப்­பட்­டி­ருந்­தது.
அதன்­படி, அமைச்­சர்­கள், இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளின் அடிப்­ப­டைச் சம்­ப­ளம் ஒரு இலட்­சம் 40 ஆயி­ரம் ரூபா­வா­க­வும் பிரதி அமைச்­சர்­க­ளின் அடிப்­ப­டைச் சம்­ப­ளம் ஒரு இலட்­சத்து 35 ஆயி­ரம் ரூபா­வா­க­வும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் அடிப்­ப­டைச் சம்­ப­ளம் ஒரு இலட்­சத்து 20 ஆயி­ரம் ரூபா­வா­க­வும் மாற்­றம் அதி­க­ரிக்க திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.