(க.கிஷாந்தன்)
இலங்கை பூராகவும் தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சையானது 05.08.2018 அன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகியது. சுமார் 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் பரிட்சைக்கு தோற்றவுள்ளனர்.
புலமை பரிசில் பரீட்சைக்கான முதலாவது வினாத்தாளுக்கான பரீட்சை காலை 9.30 இலிருந்து 10.15 வரைக்குமான 45 நிமிடங்களை கொண்டிருக்கும். இரண்டாம் வினாத்தாள் முற்பகல் 10.45 மணிமுதல் நண்பகல் 12 மணி வரைக்குமான 1 மணி நேரம் 15 நிமிடங்களை கொண்டிருக்கும்.
அந்தவகையில் மலையகத்திலும் 05.08.2018 அன்று மலையக மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை எம்மால் அவதானிக்க முடிந்திருந்தது. அந்தவகையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவா்கள் மற்றும் ஏனைய பாடசாலை மாணவர்கள் ஆா்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது. அத்தோடு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.


Post a Comment
Post a Comment