கடமை பொறுப்பேற்றார்




(அப்துல்சலாம் யாசீம்) 


கிழக்கு மாகாண தேர்தல்கள் பிரதி ஆணையாளராக சங்கரப்பிள்ளை சுதாகரன் தேர்தல்கள் ஆணைக்குழுவால் அண்மையில் நியமிக்கப்பட்டதுடன் அவர் தமது கடமைகளை சுபநேரத்தில்  உத்தியோகபூர்வமாக திருகோணமலை பிரட்ரிக்கோட்டையிலமைந்துள்ள மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் (14)பொறுப்பேற்றார்.

இலங்கை நிருவாக சேவையின் முதலாம் தர அதிகாரியான இவர் திருகோணமலை மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளராக இப்பதவியை ஏற்க முன்னர் கடமையாற்றியிருந்ததுடன் வன்னி  யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு  மாவட்ட தேர்தல்கள் உதவி  ஆணையாளராகவும் முன்னர் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை திருகோணமலை மாவட்ட தேர்தல்கள் உதவி ஆணையாளராக கடமையாற்றிய ஜே.ஜெனிட்டன் மன்னார் மாவட்ட தேர்தல்கள் உதவி ஆணையாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடமைளை பொறுப்பேற்கும் நிகழ்வில் தேர்தல்கள் உதவி ஆணையாளர்  ஜே.ஜெனிட்டன், கிழக்கு மாகாணத்தின்  சமூக சேவைகள் திணைக்கள மாகாண பணிப்பாளர் என்.மதிவண்ணன், திருகோணமலை மாவட்ட தேர்தல்கள் அலுவலக பிரதான முகாமைத்துவ உதவியாளர் பி.ஜெயபரன் சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.