இங்கிலாந்து அணி, இழந்தது 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும்


இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. 

கண்டி பல்லேகல மைதானத்தில் இன்று (14) ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

இதன்படி களம் இறங்கிய இங்கிலாந்து அணி 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 

இங்கிலாந்து அணி சார்பாக சாம் குரன் 64 ஓட்டங்களையும் ஜொஸ் பட்லர் 63 ஓட்டங்களையும் பெற்றனர். 

இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் தில்ருவன் பெரேரா 4 விக்கெட்டுக்களையும் மலிந்த புஷ்பகுமார 3 விக்கெட்டுக்களையும் அகில தனஞ்சய 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.