(இராஜதுரை ஹஷான்)
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் ஒருபோதும் தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு எவ்விதத்திலும் தீர்வினை பெற்றுக் கெர்டுக்காது எனத் தெரிவித்த பொதுஜன பெரமுன முன்னணியின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ், மக்களே அனைத்து பிரச்சினைகளுக்கும் வாக்குரிமையின் ஊடாக தீர்வை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுன முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் நிர்வாக செயற்பாடுகளுக்கு மாத்திரமே மேன்முறையீட்டு நீதிமன்றம் தற்காலிக தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. இத் தீர்ப்பினை தொடர்ந்து நாட்டில் பிரதமர், அமைச்சரவை கிடையாது என்று மாறுப்பட்ட கருத்துக்கள் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. இது முற்றிலும் தவறான நிலைப்பாடாகும்.
தற்போதை அரசியல் நெருக்கடியின் காரணமாக அடுத்த வருடத்தில் அரச நிர்வாகத்தின் முன்னெடுப்புக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படும். இதற்கு ஜனவரியில் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் அல்லது நாட்டு நலனை கருத்திற் கொண்டு இடைக்கால வரவு, செலவு திட்டத்தினை முதல் காலாண்டிற்கு அமுல்படுத்த வேண்டும் என்றார்.


Post a Comment
Post a Comment