பெண் சட்டத்தரணியின் வீடு, தீக்கிரை


பெண் சட்டத்தரணியின் வீடு இனந்தெரியாதவர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் வெள்ளவாயா திமன்றத்துக்கு முன்பாக நடந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பெண் சட்டத்தரணியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டத்தரணி வெளிநாடொன்றுக்கச் சென்றிருந்த வேளையிலேயே, அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணியின் வீட்டுக்குள் ஏற்கனவே புகுந்த சாரதி, சட்டத்தரணியின் பெருமளவிலான தங்க நகைகளைத் திருடி, தனது மனைவியிடம் கொடுத்துள்ளார். இதனை மறைப்பதற்காக வீட்டுக்குத் தீ வைத்ததாகவும் சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சாரதியின் மனைவியிடமிருந்து, தங்க நகைகள் சிலவும், பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.