முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்


இலங்கையின் இறுதி யுத்தத்தில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் இன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றுவருகின்றன. 

10 வது ஆண்டினை நினைவாகக்கொண்டு இந்த ஆண்டு வடகிழக்கின் பல பாகங்களிலும் பொது அமைப்புகளினாலும் அரசியல் கட்சிகளினாலும் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படுகின்றது. 

இந்நிகழ்வுகளின் போது உயிர் நீத்த மக்களை நினைவு கூர்ந்து மாலை அனுவித்து, மலர் தூவி, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

மன்னார், மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி உட்பட வடக்கு கிழக்கின் பெரும்பாலான பிரதேசங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. 

இந்த நிகழ்வுகளில் மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளின் படங்களை மேலே காணலாம்.