தீ விபத்தில் பெண் ஒருவர் பலி


(க.கிஷாந்தன்)
பதுளை, பிங்அராவ, ஜலனல வீதியில் உள்ள வீடொன்றில் 10.06.2019 அன்று இடம்பெற்ற தீ விபத்தில் பெண் ஒருவர் வீட்டினுள் தீக்கிரையாகி உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்மிகா ரத்னாயக்க எனும் 45 வயதுடைய 3 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், காலை இந்த விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பெண்ணின் மகன்கள் இருவரும் பாடசாலைக்கு சென்றிருந்ததாகவும் மகள் வேலைக்கு சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்து பாரிய சத்தம் ஒன்று கேட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்த போதும் எவ்வித வெடிப்பு சம்பவமும் இடம்பெறவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.