எதிர்பார்ப்புகள் ஒத்துபோகும் ஒரு புதிய தலைமைத்துவமே நாட்டுக்கு அவசியம்


மக்களின் எதிர்பார்ப்பும் ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பும் ஒத்துபோகும் ஒரு புதிய தலைமைத்துவமே நாட்டுக்கு அவசியம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தறை அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர் பொருளாதார ரீதியாக நாட்டை முன்னோக்கி செல்ல நடைமுறையில் உள்ள அரசாங்கத்திற்கு முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.