மொட்டு சின்னத்தல் போட்டியிட்டு பாரிய வெற்றி பெறுவோம்!


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாம் தாமரை மொட்டு சின்னத்திலேயே போட்டியிட்டு, பாரிய வெற்றியை பெறுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ இன்று காலை 9 மணியளவிலான சுபநேரத்தில் வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளார்.
மிரிஹான இல்லத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் உள்ளிட்ட பௌத்த மதகுருமார்களினால் மேற்கொள்னப்பட்ட வழிபாடுகளுடன் கோத்தாபய பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆசீர்வாதத்துடன் வேட்புமனுவில் கையெழுத்திட்டார்.