அக்கரைப்பற்று தொழி்ல்நுட்பக் கல்லுாரியில் 2020ம் அண்டில் பல் துறைகளுக்குமான கற்கை நெறிகள் ஆரம்பமாகியுள்ளன. இது தொடர்பாக புது முக மாணவர்களை வரவேற்று விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று தொழில் நுட்பக் கல்லுாரி அதிபர் சோமசூரியம் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பிரதி அதிபர், பதிவாளர் பியாஸ், வழிகாட்டுனர் பிஸ்றின் ஆகியோர் கலந்து கற்கை நெறிகள் தொடர்பான விளக்கமளித்தனர்.
இதேவேளை,இன்றைய நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கல்ந்து கொண்ட சட்டத்தரணி இஸ்மாயில் உவைசுர்ரஹ்மான், மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் தொழில்நுட்பக் கல்லுாரியின் ஒழுக்க விதிகள் மற்றும் அதன் வகிபாகம் பற்றி விளக்கமளித்தார்.
Post a Comment
Post a Comment