#ஜனாசா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்


நேற்று இரவு வைத்தியசாலையில் காலமான ஓய்வுபெற்ற அதிபரும், பிரபல அறிவிப்பாளருமான ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் ஜனாசா தற்சமயம் சாய்ந்தமருதில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
கலை இலக்கியவாதிகள், ஒலிபரப்பாளர்கள், கல்விமான்கள், வானொலி நேயர்கள் என பெருந்திரளானோர் அங்கு ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் ஜனாசவைப் பார்வையிடுவதாக சாயந்தமருதிலலுள்ள எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சாய்நதமருது அக்பர் பள்ளிவாயலில் மஹ்ரிப் தொழுகையின் பின் ஜனாசாத் தொழுகை இடம்பெற்று அங்கு நல்லடக்கம் செய்யப்படும்.