விசாரணை துவக்கம்



ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இருநூற்று தொண்ணூற்று எட்டு பேர் பலியான எம்ஹெச் 17 மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், யுக்ரேனில் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் மூன்று ரஷ்யர்கள், ஒரு யுக்ரேனியருக்கு எதிரான விசாரணை, நெதர்லாந்து நீதிமன்றத்தில் இன்று தொடங்கியுள்ளது.
ரஷ்ய ஆதரவு யுக்ரேனிய பிராந்தியத்தில் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்ட மூவரும் நீதிமன்றத்துக்கு வராத நிலையில், நான்காவது நபர் சார்பில் அவரது வழக்கறிஞர் மட்டும் விசாரணைக்கு ஆஜரானார்.
சந்தேக நபர்களின்றி இந்த வழக்கு விசாரணை நடைபெறும் என்று ஆம்ஸ்டெர்டாம் பல்கலைக்கழக பேராசிரியரும் விசாரணையை தொடங்கி வைப்பவருமான மேரியெக் டி ஹூன் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த வழக்கில் ரஷ்யாவுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்பட்டாலும் அதை அந்நாடு தொடர்ந்து மறுத்து வருகிறது.