கற்றறிந்த சட்டத்தரணிகளான மலையக மங்கையர்களை வாழ்த்துவோம்!


#இஸ்மாயில் உவைசுர்ரஹ்மான்.

மலையகம் இலங்கையின் பொருளியலுக்கு எவ்வாறு வலுச் சேர்க்கின்றதோ, அது போல கல்வித் துறையிலும் ஆணித்தரமாக கால் பதிக்க விளைகின்றது இலங்கையின் சட்டத்துறையில் அரை நுாற்றாண்டுக்கு  மேலாக  பல சட்டத்தரணிகளக் கண்ட மலையகம், அண்மையிலும், நீதிபதிகளையும் நீதியரசரையும் ஈண்றுள்ளது.


அண்மையில் சட்டத்தரணிகளாக சத்தியப் பிரமாணம் செய்த இவர்கள் மூவரும், அக்கரப்பத்தனை.தலவாக்கலை,நாணுஓயா ஆகிய பிரதேசங்களில் இருந்து நீதிமன்றிற்கு புது முக சட்டத்தரணிகளாக வருகை தந்துள்ளனர். இவர்கள் வழக்காடு மன்றில் வழக்கறிஞர்களாக மிளிர வாழ்த்துக்கள்!