விழிப்புணர்வு


 


(க.கிஷாந்தன்)

நுவரெலியா  மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக பொது சுகாதார திணைக்களம் பொலிஸார் இணைந்து பொது போக்குவரத்து வாகனங்களில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு “மீட்டரான வாழ்க்கை“ எனும் எழுதப்பட்டுள்ள ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை ஒன்றை இன்று (29.10.2020) (வியாழக்கிழமை) கினிகத்தேனை பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து வைத்தனர்.

இந்த கொரோனா தொற்று விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் ஆலோசனைக்கமைய அட்டன் மற்றும் கினிகத்தேனை பொலிஸ் பரிசோதகர்கள் தலைமையிலான போக்குவரத்து பொலிசார் இணைந்து இந்த விழிப்பூட்டும் நடவடிக்கையை பேரூந்து நிலையத்தில் ஆரம்பித்தனர்.

இதற்கமைய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளிலும், தனியார் போக்குவரத்து பேரூந்துகள் என்பவற்றிலும் இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டும் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.