#Breaking; விளக்க மறியலில், ரிசாத் பதியுத்தீன்




அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய  சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான ரிசாத் பதியுதீனை எதிர்வரும்   27ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் இன்று கட்டளையிட்டார்.
 

ரிசாத் பதியுதீன் (Risad Badhiutheen, பிறப்பு: நவம்பர் 27, 1972), இல் பிறந்தவர். வடபுலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவரான இவர், 2001ம் ஆண்டு முதல் இலங்கை அரசியலில் மிளிர்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினரான இவர் பிரதி அமைச்சராக, அமைச்சராக பரிணமித்து வருகின்றார். 


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான இவர் நடப்பு நாடாளுமன்றின் அங்கத்தவராகவும் தெரிவு செய்யப்பட்டார். 2020ம் ஆண்டு இடம் பெற்ற நடாளுமன்றத் தேர்தலிலும் தெரிவு செய்யப்பட்டார்.