சாகாமம் பிரதேசத்தில் அதிகூடிய 116.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி


 


வி.சுகிர்தகுமார் 0777113659   -

 
  அம்பாரை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் சாகாமம் பிரதேசத்தில் அதிகூடிய 116.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொத்துவில் வானிலை அவதான நிலைய கடமைநேர அதிகாரி  எம்.ஏம்.எம். தாதிக் தெரிவித்தார்.

இன்று காலை 8மணியுடன் முடிவடைந்த 24மணித்தியாலங்களுக்குள் அக்கரைப்பற்றில் 113.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் அம்பாரையில் 109.02 ரூபஸ்குளத்தில் 95 பாணம பிரதேசத்தில் 89.4 மகோயா பிரதேசத்தில் 84.2 பொத்துவில் பிரதேசத்தில் 83 பதியத்தலாவ பிரதேசத்தில் 78 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய பிரதேசங்களிலும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் கூறினார்.  

பெய்துவரும் அடை மழையினால் சாகாமம் பிரதான வீதியின் கூளாவடி பிரதேசத்திற்கு அன்மித்த தாம்போதி மேலாக வெள்ளம் பாய்ந்து வருகின்றது.

இதனால் அலிக்கம்பை கூளாவடி சாந்திபுரம் கிராமங்களில் வாழும் மக்களும் குறித்த பிரதேசங்களில் வாழும் விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெய்து வரும் அடை மழையினால் மாவட்டத்தின் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில், கல்முனை, நிந்தவூர், அம்பாரை, உள்ளிட்ட பிரதேசங்களின் தாழ் நில பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது.
 
வீதிகளும்இகுடியிருப்புக்களும்; வெள்ளத்தால் மூழ்கியுள்ளதுடன் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
 
இரு தினங்களுக்கு முன்னர் ஆரம்பித்த மழை வீழ்ச்சி இன்று காலை வரை நீடித்து வரும் நிலையில் சில குடியிருப்புகளிலும் நீர் புகுந்துள்ளது.