கவனயீர்ப்பு


 


(க.கிஷாந்தன்)

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள விடயத்தில் இந்த அரசாங்கம் தொழிலாளர்களை ஏமாற்ற வேண்டாம் என கோரி ஜே.வி.பியின் தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் அட்டன் நகரில் 06.12.2020 அன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

இந்த போது, ஏமாற்ற வேண்டாம், வரவு செலவு திட்டத்தில் தொழிலாளர்களின் ஆயிரம் சம்பளத்தை உள்வாங்கு அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றம் போன்ற பல்வேறு வசனங்கள் எழுதிய சுலோகங்களை ஏந்தி இந்த போராட்டமானது அட்டன் நகர மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டது.

அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் கிட்ணன் செல்வராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை, நுவரெலியா மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளர் மஞ்சுள சுரவீர முன்னெடுத்தார்.

கொரோனா வைரஸ் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடைவெளிகளை ஏற்படுத்தி 15 உறுப்பினர்களுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.