சென்னையில் நடைபெற்று வரும் இந்தியன் ப்ரீமியர் லீக் வீரர்களுக்கான ஏலத்தில் மிக அதிகபட்சமாக ரூ. 16.25 கோடிக்கு தென்னாப்பிரிக்கா ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியிருக்கிறது. ஐபிஎல் வரலாற்றிலேயே இந்த அளவுக்கு இதுவரை யாரும் ஏலம் போனதில்லை.
இந்த ஏலம் கேட்பு நடைமுறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Twitter பதிவின் முடிவு, 1
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்லை ரூ. 14.25 கோடிக்கு வாங்கியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் வசம் இருந்த ஸ்டீவ் ஸ்மித் இம்முறை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ரூ. 2.2 கோடி அளவில் ஏலம் போனார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இங்கிலாந்து ஆல் ரவுண்டர் மொயீன் அலியை ரூ. 7 கோடிக்கு வாங்கியிருக்கிறது. இதேவேளை வங்கதேசத்தின் ஆல் ரவுண்டரான ஷகிப் அல் ஹசனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 3.20 கோடிக்கு வாங்கியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்திய ஆல் ரவுண்டரான ஷிவம் துவேயை ரூ. 4.40 கோடி அளவுக்கு வாங்கியிருக்கிறது.
ஆனால், ஆச்சரியமூட்டும் வகையில் ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், கேதார் ஜாதவ், ஆரோன் ஃபின்ச், எவின் லியூவிஸ் போன்ற பிரபலங்கள் இதுவரை ஏலத்தில் எடுக்கப்படவில்லை.
Twitter பதிவின் முடிவு, 2
அதிகபட்ச ஏலத்துக்கு போன கிறிஸ் மோரிஸ், கெளன் மேக்ஸ் வரிசையில் ஜை ரிச்சர்ட்சனை ரூ. 14 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது. நாதன் கூல்ட்டரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 5 கோடிக்கும் பியூஸ் சாவ்லாவை ரூ. 2.40 கோடிக்கும் வாங்கியது.
அன்கேப்ட் வீரர்கள் பட்டியலில் இருந்த கிருஷ்ணப்பா கெளதமை ரூ. 9.25 கோடிக்கு சிஎஸ்கே அணி வாங்கியது. ஷாரூக் கான் என்ற வீரரை ரூ. 5.25 கோடிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியும், சேத்தன் சகார்த்யா என்ற வீரரை ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 1.20 கோடிக்கும் வாங்கின.
உமேஷ் யாதவ், டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் ரூ. 1 கோடிக்கு ஏலம் போனார். ஆஃப் ஸ்பின்னரான ஹர்பஜன் சிங் இம்முறை ஏலத்தில் எடுக்கப்படாத பிரபல நட்சத்திரமாக அறியப்படுகிறார். இதேவேளை, அன்கேப்ட் வீரர் பட்டியலில் இருந்த ரிலே மெரடித்தை ரூ. 8 கோடி கொடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியிருக்கிறது.
தமிழக அணி வீரர்கள் புறக்கணிப்பா?
தமிழ்நாடு அணியில் 2014ஆம் ஆண்டு முதல் இதுநாள்வரை ஷாரூக் கான் இருந்து வந்தார். அவரை தக்க வைக்க சிஎஸ்கே அணி முயற்சிக்கவில்லை. அவரை பஞ்சாப் கிங்ஸ் வாங்கியிருக்கிறது.
இதேபோல, சிஎஸ்கே அணியில் இருந்த லெக் ஸ்பின்னரான பியூஷ் சால்வாவை மும்பை இந்தியன்ஸ் வாங்கியிருக்கிறது.
தற்போது தமிழ்நாடு அணியில் சாய் கிஷோர், என். ஜெகதீசன் உள்ளபோதும் அவர்களை அணியில் சேர்க்க சிஎஸ்கே அணியோ அதன் கேப்டன் தோனியோ ஆர்வம் காட்டவில்லை என தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் சமூக ஊடக பக்கங்களில் கவலையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
தொடர்ந்து ஏலம் நடந்து வருகிறது.
Post a Comment
Post a Comment