மருதமுனை மக்களுக்கான இரண்டாம் கட்ட அரச நிவாரணங்கள்




(சர்ஜுன் லாபீர்) 


கொரோனாவினால் பாதிக்கப்பட்டு கடந்த 03ம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்ட மருதமுனை-03 கிராம சேகவர் பிரிவு மக்களுக்கான அரசாங்கத்தின் இரண்டாம் கட்ட நிவாரண பகிர்ந்தளிப்பு இன்று(16)முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள்ளது. 


இந் நிவாரணம் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,சமூர்த்தி முகாமையாளர் சட்டத்தரணி எம்.எம் முபீன்,நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் யூ.எல் பத்துருத்தீன்,கிராம.சேவகர் எம்.எஸ்.ஏ கையூம்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்

எம் ஹமீஸ்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.பி

எம் நவாஸ்,எம்.எஸ்.எம் நாஸீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.