மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன


 


மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்தார்.

இற்கமைய மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் ஆகஸ்ட் முதலாவது திகதி வரை இந்த தடை அமுலில் இருக்கும் என அவர் கூறினார்.

முன்னதாக அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்காக மாகாணங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.