காரைதீவில் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு காசோலைகள்





 காரைதீவில் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு உதவித் தொகைக்கான காசோலை வழங்கும் நிகழ்வு !


நூருல் ஹுதா உமர்

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் உதவி அவசியமான காரைதீவு பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழுள்ள பிரதேசங்களில் வசிக்கும் கலைஞர்களுக்கான உதவி தொகை வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜனின் தலைமையில் காரைதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

தெரிவு செய்யப்பட்ட பல்துறைசார்ந்த கலைஞர்களுக்கு உதவித் தொகைக்கான காசோலை வழங்கும் இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எஸ் பாத்தீபன், காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் வி.விக்கினேஸ்வரனும் கலந்து கொண்டு உதவித் தொகைக்கான காசோலைகளை தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு வழங்கி வைத்தனர்.