முகமது நபி கார்ட்டூனை வரைந்த லார்ஸ் வில்க்ஸ் சாலை விபத்தில் மரணம்


 


  1. முகமது நபி கார்ட்டூனை வரைந்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த லார்ஸ் வில்க்ஸ் சாலை விபத்தில் மரணமடைந்ததாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    காவல்துறை வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது ஒரு ட்ரக்கில் மோதி விபத்து நடந்ததாகத் தெரியவந்திருக்கிறது. இந்த விபத்தில் அவருடன் சென்று கொண்டிருந்த இரு காவலர்களும் உயிரிழந்தனர்.

    இதில் சதி ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து ஏதும் உறுதி செய்யப்படவில்லை.

    டென்மார்க் செய்தித்தாள் முகமது நபியின் கார்ட்டூன்களை வெளியிட்ட அடுத்த ஆண்டில், வில்க்ஸ் கார்ட்டூன் வரைந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான மிரட்டல்கள் வந்ததால், காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

    2007-ஆம் ஆண்டில் இந்த கார்ட்டூன் வரையப்பட்டபோது உலகம் முழுவதும் இஸ்லாமியர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

    அல்-கய்தா இயக்கம் அவரது உயிருக்கு 1 லட்சம் டாலர் வெகுமதி அளிப்பதாக அஅதே நாளில் இஸ்லாமிய மாநாட்டின் அமைப்பு (OIC), 57 முஸ்லீம் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசுக்கு இடையேயான அமைப்பு, ஒரு அறிக்கையை வெளியிட்டது, அங்கு நெரிக்ஸ் அல்லேஹண்டா செய்தித்தாளில் ஸ்வீடன் கலைஞர் லார்ஸ் வில்க்ஸால் முஹம்மதுவின் அவதூறான கேலிச்சித்திரங்களை வெளியிட்டதை கடுமையாக கண்டனம் செய்தது.