அக்கரைப்பற்றிலும் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டம்



 


வி.சுகிர்தகுமார் 

 அக்கரைப்பற்றிலும் இன்று அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.
அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியின் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அருகில்  அராஜகத்திற்கு எதிராக அணி திரள்வோம் எனும் வாசகம் தாங்கிய இளைஞர்கள் பலர் குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
காலிமுகத்திடலில் இன்று ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் கலவரத்தை தொடர்ந்தே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.
வீதியின் மத்தியில் டயர்கள் எரிக்கப்பட்டுள்ளதுடன் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டம் நடைபெற்று வருகின்றது.