எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசைகளில் மக்கள்




 


வி.சுகிர்தகுமார்  

 அம்பாரை மாவட்டத்திலும் எரிபொருளுக்கான கேள்விகள் அதிகரித்துள்ள நிலையில் எரிபொருள் வழங்கும் சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசைகளில் மக்கள் காத்திருப்பதை காண முடிகின்றது.
ஆலையடிவேம்பு பல நோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று இரவு முதல் பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோ வாகன உரிமையாளர்கள் இரு வரிசைகளில் காத்திருந்ததுடன் இன்று காலை வரை  எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களால் வழங்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

ஆயினும் காலை 10 மணியளவில் எரிபொருள் முடிவடைந்ததால் அதிகளவான பொதுமக்கள் வாகனங்களுடன் திரும்பி சென்றதை காண முடிந்தது..

மின்சாரம் தடைப்பட்டதன் விளைவாக எரிபொருள் வழங்கும் செயற்பாடுகள்; ஜெனரேட்டர் மூலமாகவும் இடம்பெற்றன.

எது எவ்வாறாயினும் தொடர்ச்சியாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசைகளில் மக்கள் மீண்டும் காத்திருக்கும் நிலையானது பொதுமக்கள் மத்தியில் விசனத்தை உண்டுபண்ணியுள்ளதுடன்  மக்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது