சித்திரைப்புத்தாண்டையும், நோன்புப் பெருநாளையும் வரவேற்க மக்கள் தயார்




 .


சுகிர்தகுமார் 0777113659

  அம்பாரை மாவட்டத்தில் வாழும் தமிழ் சிங்கள மக்களும்; சித்திரைப்புத்தாண்டை கொண்டாட தயாராகி வரும் அதேநேரம் பெருநாள் கொண்டாட்டத்திற்காக முஸ்லிம் மக்களும் தயாராகிவருகின்றனர்.
நாட்டில் பொருட்களின் விலை சற்று குறைவடைந்துள்ள நிலையில் மக்கள் பொருட்கொள்வனவிலும் ஆடைக்கொள்வனவிலும் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிந்தது.
பொருட்தட்டுப்பாடு பணத்தட்டுப்பாடு போன்ற காரணிகள் கடந்த நாட்களில்; தாக்கம் செலுத்தியபோதும் தற்போது மக்கள் புத்தாண்டை ஓரளவேனும் மகிழ்ச்சியுடனும் இன்முகத்துடன் வரவேற்க காத்திருப்பதையும் காண முடிந்தது.
இதேநேரம் புதுவருடத்தின் பின்னராவது நாட்டில் சுமூகமான நிலை உருவாக வேண்டும் என்பதே பலரது பிரார்த்தனையாக இருக்கின்றது.
இந்நிலையில் நடமாடும் விற்பனை நிலையங்கள் அதிகளவாக அமைக்கப்பட்டுள்ள நிலையில் வெளியூர் வியாபாரிகளின் வருகையும் அதிகரித்து காணப்பட்டது.
சதொச போன்ற அரச விற்பனை நிலையங்களிலும் ஏனைய விற்பனை நிலையங்களிலும் தேவையான அளவிற்கு பொருட் கொள்வனவு செய்ய கூடிய நிலை உள்ளதையும் மக்கள் கருத்துக்கள் மூலம் அறிய முடிகின்றது.
எனினும் பழவகைகள் மரக்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் சந்தையில் தேவையான அளவு காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.