4 மாவட்ட நீதிபதிகளுக்கு ஜனாதிபதியால் பதவி உயர்வு


 


மாவட்ட நீதிபதிகளான ரி.ஜே. பிரபாகரன், பி.கே. பரண கமகே, பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி கே. ஜயதிலக மற்றும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி கே.டி.வை.எம். நயனி நிர்மலா கஸ்தூரிரத்ன ஆகியோருக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வழங்கினார்.