அக்கரைப்பற்றில் மூவின மக்களையும் உள்ளடக்கியதாக பொசன் மிகுந்து மகா பெரகரா




 


(வி.சுகிர்தகுமார்) 0777113659 


 அக்கரைப்பற்று தம்மரெத்தின சிங்கள மகா வித்தியாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் ஸ்ரீ விஜயாராம மகாவிகாரையில் மூவின மக்களையும் உள்ளடக்கியதாக 04ஆம் திகதி இடம்பெறவுள்ள பொசன் மிகுந்து மகா பெரகரா தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நேற்று (01) மாலை நடைபெற்றது.

அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.டக்ளஸின் ஆலோசனைக்கேற்ப ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஸ்ரீ விஜயாராம மகா விகாரையின் விகாராதிபதி தேவகொட சோரத்த தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் பொலிசார் உள்ளிட்ட பாதுகாப்பு உயர் அதிகாரிகள் மாவட்ட செயலக அதிகாரிகள் பிரதேச செயலக அதிகாரிகள் பல்வேறு அரச திணைக்களங்களின் அதிகாரிகள் பிரதேச சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில்  பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன