அக்கரைப்பற்றில், NPP வேட்பாளர் முஸ்னத் ஆசிரியர் மீது தாக்குதல்





lதேசிய மக்கள் சக்தியின் நகர வட்டார வேட்பாளர், ஆசிரியர் முஸ்னத் ஸரிபுத்தீன் அவர்கள் நேற்று பின்னிரவில் தாக்குதலுக்கு இலக்காகி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அக்கரைப்பற்று பிஸ்கால் வீதியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலும் இவர் கலந்து கொண்டிருந்தார். இதற்குப் பிறகு, நேற்றுப் பின்னிரவு இவரது, வீட்டைச் சுற்றி வளைத்த தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்கள் சிலர் இவர் மீது தாக்குதல் தொடுத்திருக்கின்றார்கள்.

அக்கரைப்பற்று பெலிசார் இந்த தாக்குதல் சம்பந்தமாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். குறித்த தாக்குதலை மேற்கொண்டவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் தெரிய வருகிறது