வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்டம் தம்பட்டை 2 கடற்கரையினை அண்மித்த பிரதேசத்தில் 300 இற்கும் மேற்பட்ட மூலிகை மரங்களை கொண்டதான இலங்கையில் முதலாவதாக உருவாக்கப்பட்ட நிம்பா சித்தாயூர்வேத ஒருங்கிணைந்த வைத்திய நிலையம் இன்று (04)திறந்து வைக்கப்பட்டது.
வைத்திய நிலையத்தின் ஸ்தாபகர் செ.விக்னேஸ்வரமூர்த்தியின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தம்பட்டை தபோவனம் ஸ்ரீமத் சுவாமி நித்தியானந்தா ஜூ மகராஜ் ஆன்மீக அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
உணவே மருந்தாகும் மருந்தே உணவாகும் எனும் அடிப்படையில் கீழை நாட்டு வைத்திய முறைகளாக இருக்கும் சித்த வைத்தியம் ஆயுர்வேத வைத்தியம் யுனானி போன்ற வைத்திய சிகிச்சைகள் இங்கு வழங்கப்படவுள்ளன.
குறிப்பாக ஒட்டிசியம் எனும் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதுடன் இந்நோய் வராமல் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுப்பது தொடர்பிலும் ஆலோசானைகள் சிகிச்சைகள் என்பன இங்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு வைத்தியர்கள் என அழைக்கப்படும் சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் நிறைந்து காணப்பட்ட அம்பாரை மாவட்டத்தில் அத்துறை மருவி வரும் தற்கால நிலையில் இவ் வைத்திய நிலையம் திறக்கப்பட்டது இப்பிரதேச மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இதன் மூலம் பெறப்படும் வருமானங்கள் ஜீவாதார சித்த வித்தியா அறக்கட்டளை எனும் அமைப்பினூடாக வருமானம் குறைந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வைத்திய நிலையத்தின் ஸ்தாபகர் செ.விக்னேஸ்வரமூர்த்தியின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தம்பட்டை தபோவனம் ஸ்ரீமத் சுவாமி நித்தியானந்தா ஜூ மகராஜ் ஆன்மீக அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
உணவே மருந்தாகும் மருந்தே உணவாகும் எனும் அடிப்படையில் கீழை நாட்டு வைத்திய முறைகளாக இருக்கும் சித்த வைத்தியம் ஆயுர்வேத வைத்தியம் யுனானி போன்ற வைத்திய சிகிச்சைகள் இங்கு வழங்கப்படவுள்ளன.
குறிப்பாக ஒட்டிசியம் எனும் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதுடன் இந்நோய் வராமல் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுப்பது தொடர்பிலும் ஆலோசானைகள் சிகிச்சைகள் என்பன இங்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு வைத்தியர்கள் என அழைக்கப்படும் சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் நிறைந்து காணப்பட்ட அம்பாரை மாவட்டத்தில் அத்துறை மருவி வரும் தற்கால நிலையில் இவ் வைத்திய நிலையம் திறக்கப்பட்டது இப்பிரதேச மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இதன் மூலம் பெறப்படும் வருமானங்கள் ஜீவாதார சித்த வித்தியா அறக்கட்டளை எனும் அமைப்பினூடாக வருமானம் குறைந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment