குரங்கை வேட்டையாடி உரித்து இறைச்சியாக்கிய 03 பேர் கைது



 


 ராவண எல்ல தளப் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் நடத்திய ரோந்துப் பணியின் போது, ராவண எல்ல சரணாலயத்தில் ஒரு குரங்கைக் கொன்று உரித்து இறைச்சியாக்கிய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


சந்தேக நபர்களும் வழக்குப் பொருட்களும் இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், மூன்று சந்தேக நபர்களுக்கும் ரூ.145,000/= அபராதம் விதிக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற குற்றத்தில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார்