இலங்கையின் மீ உயர்மன்ற நீதியரசரான எஸ்.துரைராஜா அவர்கள் ஓய்வுக்கு வந்திருக்கின்றார்.
இவர் மீது மிகுந்த மரியாதை எனக்குமிருந்தது.
இலங்கை வானொலியில் அன்று நான் பணிபுரிகின்ற போது, சட்டமும் நாமும் என்ற வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் வருவதுண்டு.,இவருடன் பங்கேற்க வருபவர் சிரேஸ்ட சட்டத்தரணி தம்பு சேர் அவர்கள். சட்டம் படிக்கவே கொழும்பு சென்ற எனக்கு, இந்த நிகழ்சி அட்சதை துாவியது.கா
இலங்கைத் திறந்த பல்கலையில் சட்டம் பயின்று இறுதி ஆண்டுப் பரீட்சைக்கு முன்னதான விசேட வழிகாட்டல் பயிலரங்கு ஒன்று நடத்தப்பட்டது. அதில் வளவாளராக துரைராஜகா சேர் கலந்திருந்தார். சட்டத்தில் பட்டம் பெற்ற பின்னர், அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று, எடுத்தியம்பினார்.
அடுத்த சந்திப்பு நிகழ்ந்தது. சட்டடா அதிபர் திணைக்களத்தில்.. இலங்கை வானொலிப் பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட் வழக்கு அது. இலங்கை வானொலி அரச நிறுவனம் என்பதால், சட்டமா அதிபரும் அதில் ஒரு பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. குறித்த வானொலிப் பணிப்பாளரின் வேண்டுதலின் பேரில் சட்டமா அதிபர் திணைக்கள ஆலோசனைகளைப் பெறுவதற்காக, அங்கு சென்றோம். என்னையும் என்னுடன் வந்தவருக்கும் சட்ட ஆலோசனைகளை இன்முகத்துடன் வழங்கினார் துரைராஜா சேர்.
2010 காலப்பகுதியில் .லங்கை வானொலியை விட்டு விலகி சட்டத்தரணியதக பரிமாணம் எடுக்கும் தருணத்தில், எமக்கான தொடர்புகள் அரிதானது நானும் கிழக்கு மாகாண வழக்காடு மன்றங்களில், பிவேசித்தேன். சேர் நீதியரசாராக பதவி உயர்வு பெற்றார்.
துரைராஜா புஸ்ஸெல்லாவாவில் உள்ள சரஸ்வதி மகா வித்தியாலயத்திலும், கண்டியில் உள்ள புனித அந்தோணியர் கல்லூரியிலும் கல்வி பயின்றார்
அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலைப் பட்டமும், லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.மேலும் அவர் தடயவியல் மருத்துவம், வணிக தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி உபகரணங்கள் ஆகியவற்றில் பட்டயங்களைப் பெற்றுள்ளார்
சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு நீதியரசராக உரிய கல்வித் தகமைகள் மற்றும் சேவை மூப்பு ஆகியவற்றின் அடிப்படையிவல் நியமிக்கப்பட்ட அவர், 9 ஜனவரி 2019 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.
பிரதம நீதியரசர் நாட்டில் இல்லாத சமயத்தில், பதில் பிரதம நீதியரசாராகவும் பணி புரிந்தார்.
இலங்கையின் 100 வரு்டங்களைத் தாண்டிய மலையக சமூகத்தில் இருந்து வந்த ஒருவர் பதில் பிரதம நீதியரசராகவும்> நீதிச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பிளராகவும் வகிபாகம் செலுத்திய வரலாறு துரைராஜா சேருக்கு மாத்திரம் உரியது. இவரது மகுடத்தில் அதுவொரு மாணிக்கமாகும்.
இவர் வழங்கிய தீர்ப்பு ஒன்றிளை அண்மையில் கல்முணை குடியியல் மேன்முறையீட்டு மன்றில் விளம்பி எனது சமர்ப்பணத்தை செய்திருந்தேன் .SC Appeal 67/2021 என்பதே அந்த வழக்காகும்.
"சிறப்பான பணிக்கு நன்றிகள்!. நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளுடன் சில நேரங்களில் காரசாரமான விவாதங்கள் ஏற்பட்டாலும், அவரது சட்ட அறிவையும் ஆளுமையையும் எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. "Hulftsdorp" சமூகத்தில் அவரது அந்த நேரடி அணுகுமுறை எப்போதும் பேசப்படும் ஒரு விடயமாகும் என்பதாக சிரேஸ்ட வழக்குரைஞர்கள் துரைராஜா சேர் அவர்கள் பற்றி சொல்லக்கூடிய செல்நெறியாகும்.
நீதித்துறையில் நீங்கள் ஆற்றிய அளப்பரிய சேவை என்றும் நினைவுகூரப்படும். உங்களது அந்த சட்டப் பாரம்பரியத்தை உங்களது புதல்வரும் இத்துறையில் தொடர்வது மகிழ்ச்சிக்குரியது.
ஐயா, உங்களுக்கு இனிய ஓய்வுக்கால வாழ்த்துகள்!


Post a Comment
Post a Comment