இந்தியாவுக்கு வலுவான தொடக்கம் அளித்த சஞ்சு சாம்சன்




 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சஞ்சு சாம்சன் இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தைத் தந்துள்ளார்.

ஆறு ஓவர்கள் முடிவில், இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்துள்ளது. சஞ்சு சாம்சன் 20 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். இஷான் கிஷான் 9 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து உள்ளார்.

முன்னதாக, அபிஷேக் சர்மா 7 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். வில் ஜாக்ஸ் அவரது விக்கெட்டை வீழ்த்தினார்.

அபிஷேக் சர்மா 9 ரன்கள் எடுத்த பிறகு அவுட் ஆனார்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அபிஷேக் சர்மா 9 ரன்கள் எடுத்த பிறகு அவுட் ஆனார்

டாஸ் வென்ற இங்கிலாந்து

இந்த அரையிறுதியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், இந்தப் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், புதன்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி மார்ச் 8 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும்.