ஜேர்மனியில் துப்பாக்கிச்சூடு – 5 பேர் உயிரிழப்பு



 வடக்கு ஜேர்மனியின் ஸ்டேட் நகரில் இளைஞர் நல மையம் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.


குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


இத்தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியிடப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.