வழக்கு இலக்கம்: HC/NE/WRIT 04/24
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மத்திய மாகாண, நுவரெலியா மேல் நீதிமன்றத்தில்
வழக்கு இலக்கம்: HC/NE/WRIT 04/24
மனுதாரர்:
எஸ். மோகனராஜன்,
இல. 30, சென்லியனாட்ஸ் தோட்டம்,
ஹல்கரனோயா.
எதிர்மனுதாரர்கள்:
மதுபாணி பியசேன (செயலாளர் - முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சு, மத்திய மாகாண சபை, பல்லேகல, குண்டசாலை).
மற்றும் கல்வித் திணைக்கள அதிகாரிகள், மாகாண கல்வி சேவை ஆணைக்குழு உட்பட மேலும் நால்வர் (மொத்தம் 5 எதிர்மனுதாரர்கள்).
மனுதாரரின் நீதிமன்றக் கோரிக்கைகள்
1.இந்த பேராணை மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, மேல்நடவடிக்கைகளைத் தொடர வேண்டும்.
2.எதிர்மனுதாரர்களுக்கு இது தொடர்பான உத்தியோகபூர்வ நீதிமன்ற அறிவித்தல்களை (Notices) அனுப்ப வேண்டும்.
3."P14" என்ற கடிதத்தின் மூலம் 19.06.2024 அன்று நடத்தவிருந்த அதிபர் நியமனத்திற்கான நேர்முகத் தேர்வை, இந்த வழக்கின் இறுதி முடிவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான இடைக்காலத் தடை உத்தரவை வழங்க வேண்டும்.
4.கல்வி அமைச்சினால் தன்னிச்சையாக நடத்தவிருந்த அதிபர் நியமன நேர்முகத் தேர்வை முழுமையாக ரத்து செய்யவும், அதனைத் தடுக்கவும் பேராணைகளை (Writ of Certiorari மற்றும் Writ of Prohibition) வழங்க வேண்டும்.
5.கல்வி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், உதவிப் பணிப்பாளர் மற்றும் ISA-க்கள் (ஆசிரிய ஆலோசகர்கள்) உட்பட, வலப்பனை கல்வி வலயத்தில் அதிபர்களை நியமிப்பதற்கான விண்ணப்ப செயல்முறைகளை ஒழுங்குபடுத்தவும் மற்றும் நேர்முகத் தேர்வை நடாத்தவும் உத்தரவிடும் வகையிலான செயலுறுத்துப் பேராணை (Writ of Mandamus) வடிவிலான ஒரு கட்டளையை வழங்கவும்.
6.வலப்பனை வலயத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் அதிபர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு, நேர்முகத் தேர்வுகள் முறையாக நடத்தப்படும் வரை, திருமதி எம். ரஞ்சனி பிரியதர்ஷினி அவர்கள் சென்லியனார்ட்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபராகத் தொடர்வதற்கும், அவரது கடமைகளுக்கு எதிர்மனுதாரர்கள் இடையூறு விளைவிப்பதைத் தடுப்பதற்கும் உத்தரவிட வேண்டும்.
7.தற்போதைய அதிபரை பதவியிலிருந்து நீக்குவதற்கோ அல்லது இடமாற்றம் செய்வதற்கோ எதிர்மனுதாரர்களுக்கு தடை விதிக்க வேண்டும் (Writ of Prohibition).
8.இந்த வழக்கிற்கான செலவுத் தொகையை மனுதாரருக்கு பெற்றுத்தர வேண்டும்.
நீதிமன்றம் பொருத்தமெனக் கருதும் ஏனைய நிவாரணங்களை வழங்க வேண்டும்.
வழக்கின் தீர்ப்பு விபரம் (Judgement Details)
மத்திய மாகாணம் வலப்பனை கல்வி வலயம் சென் லெனாட்ன்ஸ் தமிழ் மகா வித்யாலய அதிபர் நியமனம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.
அதன்படி வலப்பனை கல்வி வலய கல்வித் திணைக்கள அதிகாரிகள் உட்பட ஏனைய பாடசாலைகள் அனைத்துக்கும் முறையாக வேறு ஒரு தகுதியான குழுவின் ஊடாக நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என ரிட் எழுத்தாணை (Writ of Mandamus) மாகாண மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கினை சட்டத்தரணி திரு. எஸ். மோகன் ராஜன் அவர்கள் தன்னுடைய பெயரில் பொதுநலன் கருதி தானாகவே தாக்கல் செய்து, அவரே இந்த வழக்கில் தோன்றி விவாதித்திருந்தார். அந்த அடிப்படையிலே வலப்பனை கல்வி வலயம், கல்வி திணைக்கள பணிப்பாளர், மாகாண கல்வி பணிப்பாளர், கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி சேவை ஆணைக்குழு ஆகியோருக்கு எதிராக இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கல்வி திணைக்களம் மற்றும் கல்வி அதிகாரிகள் தமது அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்தமைக்கும், ஊழல்களில் ஈடுபடுகின்றமைக்கும் எதிராக இந்த தீர்ப்பு தக்க பாடத்தினை புகட்டியுள்ளது. அத்தோடு வழக்கு தாக்கல் செய்தமை, அதற்கான செலவுகள் என்ற அடிப்படையில் சட்டத்தரணி எஸ். மோகன்ராஜ் அவர்களுக்கு நஷ்ட ஈடு (வழக்குச் செலவு) வழங்கவும் கௌரவ மேல் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.


Post a Comment
Post a Comment