ஜோர்டானில் அமெரிக்க படைத்தளம் மீது தாக்குதல்



 

மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. பின்னர், பேச்சுவார்த்தை மூலம் இரு தரப்பு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


ஆனால், உலகின் முக்கிய வர்த்தக பாதையாக திகழும் ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்தது. இதனால் சர்வதேச அளவில் மசகு எண்ணெய் விலை உயர்வை சந்தித்தது. மேலும், ஹோர்மூஸ் நீரிணையை கடக்கும் சரக்கு, மசகு எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றது. 


இந்த தாக்குதலை தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்றது.


அந்த வகையில் பஹ்ரைன், குவைத், ஜோர்டான் ஆகிய நாடுகள் மீது ஈரான் நேற்று (18) தாக்குதல் நடத்தியது.


மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள், அமெரிக்க ஆதரவு நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. ஜோர்டானிலுள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து ஈரான் நடத்திய ட்ரோன், ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க இராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 அமெரிக்க இராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். 


இதனை தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து அமெரிக்கா - ஈரான் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.