மூதூரில் மூழ்கினார் மாணவர், குளிக்கச் சென்று





🚨 மூதூர் - மஹாவலி கங்கை ஆற்றில் மூழ்கி 11 வயது சிறுவன் உயிரிழப்பு 😢

திருகோணமலை மாவட்டம், மூதூர் - கங்குவேலி பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுவன் ஒருவர் மஹாவலி கங்கை ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.


இச்சம்பவம் இன்று சனிக்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது.


குடும்பத்தினருடன் சமையலுக்குச் சென்றிருந்த நிலையில், குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியபோது இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவனின் உயிரிழப்பு குடும்பத்தினரையும், அப்பகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


🕊️ சிறுவனின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.


📍