பிறைந்துரைச்சேனை சாதுலியா அணி தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவு



 

மாவட்ட மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான உதைப்பந்தாட்டப் போட்டியில் பிறைந்துரைச்சேனை  சாதுலியா வித்தியாலய 14 வயதுக்குட்பட்ட உதைப்பந்தாட்ட அணி இரண்டாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.


சாதுலியா அணி லீக்போட்டியில் 6–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றமை அணியின் சிறப்பான ஆட்டத்தையும் திறமையையும் வெளிப்படுத்துகிறது.


மாணவர்களின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் குழு முயற்சியின் வெளிப்பாடாக இவ்வெற்றி அமைந்துள்ளதாக பாடசாலை அதிபர் எம்.எல்.நிஜாம்தீன் தெரிவித்தார்.


திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் சிறப்பான பயிற்சியினை வழங்கிய பயிற்றுவிப்பாளர்களான ஏ.ஏ.எம் இர்பான், ஏ.எம்.எம்.வபாஸ் மற்றும் மாணவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர் எச்.எம்.ஐ.பஹாஸ்தீன், பிரதி அதிபர், ஆசிரியர்கள் அனைவருக்கும் பாடசாலை அதிபர் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.