அம்பாறை மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவும் நிலையிலும், கிட்டங்கி தாம்போதி நன்னீர் குளங்களில் மீன்பிடி பாதிக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
காலையிலும் பிற்பகலிலும் மீனவர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவதோடு தரமான செப்பலி மீன்களைப் பிடித்து ஒரு கிலோ 600 ரூபாய்க்கு விற்று வருவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
வேளாண்மை அறுவடை முடிந்த நிலையில் காற்று வேகமாக வீசினாலும் நன்னீர் மீன்பிடிக்கு இவை பாதிப்பாக அமையவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை பிரதேச மக்கள் இங்கு வருகைதந்து மீனை கொள்வனவவு செய்து வீட்டுக்கு கொண்டு செல்கின்றனர்.
மட்டக்களப்பு பிரதேச வாவிகளில் பிடிக்கப்படும் நன்னீர் மீன்கள்.பண்டிருப்பு சந்தைகளில் விற்கப்படுதோடு அதற்கு நல்ல கிராக்கியும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
(நற்பிட்டிமுனை செய்தியாளர்)
.jpg)

Post a Comment
Post a Comment