காணாமல்போன குடும்பங்களின் வீடுகளுக்கே சென்று கொடுப்பனவு வழங்கிய நீதியமைச்சர்



 


காணாமல்போனவர்களின் குடும்பங்களின் நலன்களை நேரில் விசாரிப்பதற்கும், அவர்களுக்கு வழங்கப்படும் புத்துயிர்ப்பு கொடுப்பனவை கையளிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.


இதன் கீழ், கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பகுதியில் 2009ஆம் ஆண்டு காணாமல்போன இரண்டு மகள்களின் குடும்பத்திற்கு புத்துயிர்ப்பு கொடுப்பனவை அமைச்சர் இன்று (25) வழங்கினார்.