இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தலில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்கள் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் போட்டியிடும் திலங்க சுமதிபால, அர்ஜூன ரணதுங்க மற்றும் நிஷாந்த ரணதுங்க ஆகிய மூவருக்கே சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
41 ஆவது தேசிய விளையாட்டு விழா தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

