டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு



 நடப்பாண்டின் ஆரம்பம் முதல் இதுவரை நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 88,000 ஆக உயர்ந்துள்ளதாகவும் 63 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.


அதன்படி, நேற்று (05) நிலவரப்படி, நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 88,088 ஆக உயர்ந்துள்ளது.


கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2,739 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.