ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் (தராகி) கொல்லப்பட்டு இன்றுடன் ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. தர்மரத்தினம் சிவராம், 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டியில் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். மறுநாளான ஏப்ரல் 29 ஆம் திகதி புதிய நாடாளுமன்றக்கு கட்டடத்துக்கு அருகில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
சிவராமின் 11ஆவது ஞாபகார்த்த நினைவு தினம் நாளை சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் இல்ல மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினதும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தினதும் ஏற்பாட்டில் இந்த நினைவுதின நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதன்போது, ‘சிவராமின் பார்வையில் எமது ஊடகமும் அரசியலும் நிரப்பப்பட வேண்டிய இடைவெளி’ என்ற தலைப்பில் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் கல்வியியலாளர் கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா உரையாற்றவுள்ளார்.இந்த நிகழ்வில் ஊடக நண்பர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
தர்மரட்ணம் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டியில் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். மறுநாளான ஏப்ரல் 29 ஆம் திகதி புதிய நாடாளுமன்றக்கு கட்டடத்துக்கு அருகில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
யாழ்ப்பாணத்தில்...
இதேவேளை, ஊடக சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர்களிற்கான பொது நினைவு நாள் நினைவேந்தலும் அமரர் தராகி சிவராம் 11 ஆவது ஆண்டு நினைவு நாளும் இன்று 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. பிற்பகல் 03.00 மணிக்கு யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த ஊடகவியலாளர்கள் நினைவு தூபி பகுதியில் படுகொலையான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களிற்கான நினைவு சுடரேற்றலும் மலர் அஞ்சலியும் இடம்பெறவுள்ளது.
தொடர்ந்து பிற்பகல் 03.30 பொதுநூலக மண்டபத்தில் நினைவு உரைகள் மற்றும் உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர்களிற்கான பொது நினைவு நாள் நினைவேந்தல் உத்தியோகபூர்வ அறிவிப்பு என்பவை வெளிடப்படவுள்ளது.
நினைவுரைகளை கலாநிதி ரகுராம், நிலாந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி, பாசன, சந்தேசிய பண்டார ஜோதிலிங்கம் ஆகியோர் ஆற்றவுள்ளனர்.
யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் மற் றும் ஊடக சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் தெற்கு அமைப்புக்கள் ஆதரவை தெரிவித்துள்ளன.

