பாகிஸ்தான் பிரஜையின் வயிற்றில் 33 ஹெரோய்ன் வில்லைகள்



கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜையின் வயிற்றில் 33 ஹெரோய்ன் போதைப்பொருள் வில்லைகள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பாகிஸ்தான் பிரஜையின் வயிற்றிலிருந்து ஹெரோய்ன் வில்லைகளை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பாகிஸ்தானின், லாகூரிலிருந்து இலங்கையை வந்தடைந்த எம்.ஜே. 186 விமானம் மூலம் குறித்த நபர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.